பனிப்பொழிவில் தைப்பொங்கல்
பைங்கரும்பு மஞ்சளுடன்
இனிப்புடனே பல்சுவையாய்
ஏற்றுகின்ற பொங்கலினை
முனைப்புடனே வைக்கின்றோம்!
மூவுலகும் போற்றிடவே
வனப்புடைய பொங்கலினை
வாசலிலே வைத்திடுவோம்!
ஏர்முனைக்கு நேரிங்கே
ஏதுமில்லை நாட்டினிலே
போர்முனைதான் வெற்றிபெறப்
புரிவதன்றோ ஏர்முனைதான்!
மாடுகளைப் போற்றிடுவோம்
மண்வளத்தைக் காத்திடுவோம்!!
பீடுபெறப் பொங்கலிட்டுப்
பேருவகை அடைந்திடுவோம்!!!
- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)
கொல்லிமலை உரிமையாளர் கவிதை நன்று.!
பதிலளிநீக்கு