திங்கள், 1 ஜனவரி, 2024

புத்தாண்டே வருக!

எங்கும் பசுமை! இதழ்களில் பனித்துளி!

    பொங்கும் குளிரால் பொழுது புலர்ந்திட

ஈரா யிரத்துப் பதினான் காண்டே!

    சீராய் வந்தனை திருவடி வணக்கம்!

உலகம் உவப்ப உந்தன் அருளே

    நிலவுக! யாண்டும் நீணிலம் மீதில்

அன்பும் வளமும் அமைதியும் மக்கள்

    இன்புற் றிருக்க ஏற்றம் தருவாய்!

வறுமையும் பிணியும் வன்முறைக் கொடுமையும்

    சிறுமைப் படுத்தும் சாதி மதங்களின்

பிணக்கு ஒழிந்து பேருலகம் எல்லாம்

    இணக்கம் வளர இனிதாய் வருவாய்!

புத்தாண் டென்னும் பொன்மகளே!

    இத்தரை உன்னால் ஏற்றம் பெறுகவே!


- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி )

(2014 புத்தாண்டிற்காக எழுதப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக